உடுமலை, ஜூலை 24- பருவ மழை தாமதத் தால், திருமூர்த்தி அணை பாசன விவசாயிகள் வேத னையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திரு மூர்த்தி அணை அமைந் துள்ளது. இந்த அணை 60 அடி கொள்ளளவு கொண்ட தாகும். தற்போது 14 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. பிஏபி பாசன திட்டத்தில் முக்கிய பங்காற்றி வரும் திரு மூர்த்தி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் ஏராள மான கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ளது. இருப் பினும் திருமூர்த்தி அணை சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவ மழை இன்னும் துவங்க வில்லை. இதனால் அணை சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக குறைந்துள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் விவசாய பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. ஏற்கனவே பயிரிடப் பட்டிருந்த தென்னை, மக்காச்சோளம் போன்றவற்றிற்கு உரிய தண்ணீர் கிடைக் காமல் பயிர்கள் வாடி வருகிறது. இந்த பகுதி களில் பருவ மழை தீவிரம் அடைந்தால் நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். ஜூலை மாத துவக் கத்தில் பருவ மழை துவங்கும் என எதிர் பார்த்த விவசாயிகள் இந்த மாதம் முடி வதற்கு ஒரு வார காலமே உள்ள நிலையில் மழை துவங்காததால் வேதனையடைந் துள்ளனர். மழை பெய்யாததால் வெங் காயம், தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி களைக் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக் குறையால் கால்நடைகளுக்கு கூட போது மான தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்க வில்லை. அணையில் உள்ள 14 அடி தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போது மானதாக உள்ளது. திருமூர்த்தி அணை பகுதியில் மழை பெய்யாததால் பஞ்சலிங்க அருவி கடந்த ஒரு மாத காலமாக நீர்வரத்து இன்றி வெறும் பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.