tamilnadu

img

நீர் வரத்து அதிகரிப்பால் குரங்கு அருவியில் குளிக்க தடை

பொள்ளாச்சி,  ஜூலை 26 - பொள்ளாச்சி அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவியில் கடந்த 3 மாதங்களுக் குப் பின் மேற்குத் தொடர்ச்சி மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் வெள்ளி கிழமை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு குரங்கு அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.