tamilnadu

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார்

தாராபுரம், செப். 24 - திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் ராஜேந் திரபாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீ பத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில்,காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர்  அவர்களை தரக்குறைவாகப் பேசியும்,  அவர் வந்தால் சுட்டு விடும்படியும் பேசி யுள்ளார். இது போன்ற மிரட்டலும், அச் சுறுத்தலும், அநாகரிகமான பேச்சு சமுக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. எனவே காங்கிரஸ் கட்சி தலை வர்கள் குறித்து அவதூறு பரப்பியும், மிரட்டும் வகையிலும் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாராபுரம் காவல் நிலையத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில், கட்சி நிர்வாகி கள் பலர்  புகாரளித்தனர்.