கோவை, டிச. 5– மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரி ழந்த சம்பவமானது அப்பட்டமான சாதிய படுகொலை என மக்கள் கண் காணிப்பகம் கள ஆய்வுக்குப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர் இடிந்த விபத்து தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்பின் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இடிந்து விழுந்த சுவர் தீண்டாமை சுவர் என்பதை நாங்கள் கண்டுள்ளோம். அந்த மக்களின் காற்றுகூட படக்கூடாது என்பதால் இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது அப்பட் டமான சாதிய படுகொலை என் பதை நாங்கள் சொல்வோம். மேட் டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப் பாட்டம் அமைதி வழி ஆர்ப்பாட் டம். ஆனால் காவல்துறை வேண்டு மென்றே திட்டமிட்டு தடியடி நடத் தியிருக்கிறது. நாகை திருவள்ளு வன் போன்றவர்களை சட்டையைக் பிடித்து இழுத்து செல்ல வேண் டிய அவசியம் என்ன. எனவே சட்டையை பிடித்து இழுத்துசென்ற டி.எஸ்.பி., மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த சுவர் விழுந்த ததற்கான முழு காரணமும் அரசு தான். இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும். அங்கு இடிந்த சுவருக்கு அருகே இன்னும் சில தொலைவிற்கு உயர்ந்த சுவர்கள் இருக்கிறது. அதெல்லாம் இடிக்கப்பட வேண் டும். நடந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., பொறுப் பேற்க வேண்டும். இது சம்பந்த மாக யார் மீதும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழ கம் அல்லாத மற்ற மாநிலம் குறிப்பாக, கேரள மாநில இடதுசாரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து, அங்குள்ள காவல்துறை வைத்து விசாரிக்க வைப்போம். மேலும், தமிழகம் முழுவதும் இதுபோன்ற தீண்டாமை சுவர் கள் இருப்பதைக் கண்டறிந்து ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண் டும். இது சுவர் சார்ந்த பிரச்சனை யில்லை. சுவருக்கு பின்னால் உள்ள அரசியலைக் பார்க்க வேண்டும். இந்த பிரச்சனையை அணுக தெரியாமல் பெரியநாயக்கன் பாளையம் காவல் துணை கண் காணிப்பாளர் மணி, தடியடி நடத்தி யிருக்கிறார். அவர் சாதிய ரீதியில் இந்த பிரச்சனையை அணுகியி ருக்கிறார். நாகை திருவள்ளுவன், வெண்மணி உள்ளிட்ட 25 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனைக்கு பொறுப் பேற்று ஆட்சியரையும், எஸ்.பி., மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் முதல்வர் பேரிடர் என்று கடந்து செல்வது ஏற்கமுடியாது. ஒவ்வொரு மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, இந்த விஷயத்தைக் ஐ.நா.வரை எடுத்து செல்வோம் . இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தச்சந்திப்பின் போது தபெ திக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டினன், பாண்டியன், பாவேந் தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.