பொள்ளாச்சி, ஜூலை 10- தமிழக அரசால் தடைசெய்யப் படாத பிளாஸ்டிக் பொருட்களுக் கும் அபராதம் விதித்து, வியாபாரி களை மிரட்டும் நோக்கில் செயல் படும் பொள்ளாச்சி நகராட்சியைக் கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்த தடை விதித்து அரசாணை பிறப்பித்தது. இதையொட்டி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு கடை களில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது தமிழக அர சால் தடை செய்யப்படாத பிளாஸ் டிக் பொருட்களை வைத்திருந்தா லும் அதை பறிமுதல் செய்து அபரா தம் விதித்து வருகின்றனர். இதற் கிடையில், நகராட்சி அதிகாரி கள் அத்துமீறி மீறி கடைக்குள் நுழைந்து வியாபாரிகளை மிரட்டும் நோக்கில் லட்சக்கணக்கில் அபரா தம் விதித்து வருவதாக வணிகர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தடை செய்யப் படாத பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் நகராட்சி அதி காரிகளை கண்டித்து செவ்வா யன்று பொள்ளாச்சி நகராட்சி அலு வலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் இருதய ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பொள்ளாச்சி சிறு வியா பாரிகள் சங்கம் மற்றும் பொள் ளாச்சி, கிணத்துக்கடவு, வால் பாறையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பி னர்.