கோவை, ஆக. 26– பெண் சமூகத்தை இழிவாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து கோவையில் திங்களன்று மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆடிட்டர் குருமூர்த்தி பெண்கள் குறித்த மிக மோசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த பெண்கள் சமூகத் தையே இழிவுபடுத்தும் இத்தகைய பேச்சுக்கு மாதர் சங்கம் உளிட்ட பெண்கள் அமைப்புகள் மற்றும் முற் போக்காளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவையில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை பார்க்வீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் ராஜலட்சுமி தலைமை தாங்கி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் பெண்களை இழிவுப டுத்தி பேசிய வார்த்தைகளை குரூ மூர்த்தியே திரும்பப்பெறு, மன்னிப் புக் கேள் என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.