தருமபுரி, ஆக.8- உரிமைகளை பறிக்கும் மசோதாக் களை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இரண்டாவது முறையாக மோடி தலை மையிலான பாஜக அரசு பதவியேற்ற 35 நாட்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதில் 370 ஆவது பிரிவை நீக்கு வதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா-2019, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா, முத்தலாக் தடை மசோதா, திருநங் கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, அணை பாதுகாப்பு மசோதா, ஊதியங்கள் சட்ட மசோதா ஆகியவை குறிப்பிடத்தக் கவை. மேலும், 17ஆவது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டபின் இதுவரை நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழுவோ, தேர்வுக்குழுவோ அமைக்கப்பட வில்லை. மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும், மக்களை பாதிக்கும் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி வியாழனன்று தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நல்லம்பள்ளி ஒன்றியச்செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.இளம்பரிதி, சி.நாகராசன், கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், எஸ். கிரைஸாமேரி, தருமபுரி நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, பாலக்கோடு வட்டச் செய லாளர் ஜி.நக்கீரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக் கங்களாக எழுப்பினர்.