ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் சூலூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட இடங்களில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். முன்னதாக இந்த வேட்பு மனு தாக்கலின்போது சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, திமுக பகுதிகழக செயலாளர் பையாகவுண்டர் மற்றும் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.