கோவை, ஜூலை 10- நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்லாமிய பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர் பாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். கோவை குனியமுத்தூர் அண்ணா காலனியில் வசித்து வரும் இஸ்லாமிய பெண் ஒருவர் கடந்த 2 ஆம் தேதியன்று இரு நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆத்துப்பாலம் மரக் கடை அருகில் இவர்கள் வந்தபோது, இவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சபிபுல்லா (44), முகமது இப்ராஹீம் (44) ஆகியோர் வழிமறித் துள்ளனர். பின்னர் அப்பெண்ணையும், அவருடன் வந்த இரு நபர்களையும் மிரட்டி, தாக்கியுள்ளனர். அப்போது, அப்பகுதியில் கூட்டம் கூடியதால் அவர் கள் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகா ரின்பேரில், குனியமுத்தூர் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து சபிபுல்லா மற்றும் முகமது இப்ராஹீம் ஆகியோரை கைது செய்தனர். இதன்பின் அவர்களை நீதிமன்றத் தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை சட் டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறுகையில், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பிறரது தனிமனித உரிமையில் தலையிடுவதும், அவர்களை துன்புறுத்துவதும், தண்டிப்பதும் தண் டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி யான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்துள்ளார்.