கோவை, பிப். 26 - கோவையில் அரசு மதுபானக் கடையின் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தர்மராஜின் மகன் ரஞ்சித். இவர் செவ்வாயன்று அதேப் பகுதியிலுள்ள மதுபான கடைக்கு இரவு 10 மணிக்கு மேல் தனது நண்பர்க ளுடன் சென்றார். இதனையடுத்து அக்கடை யில் வேலை செய்யும் ஊழியரிடம் மதுபானம் கேட்டு மிரட்டினார். அப்போது, அங்கிருந்த அலுவலக உதவியாளர் சசிக்குமார் மதுபானம் தர மறுத்துள் ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சசிக்குமாரை கடுமையாக தாக்கினர். இத்தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்த கடை ஊழியர் சசிகுமாரை சக ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைய டுத்து ஆலந்துறை காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்து தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனர். இந்நிலையில் மதுபானக் கடைக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தும் காட்சி கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.