tamilnadu

img

எத்தனை முறை கொன்றாலும் உயிர்த்தெழுவார் மகாத்மா காந்தி

கவிஞர் நந்தலாலா பேச்சு

கோவை, நவ.20- இந்துத்துவவாதிகள் நாள்தோறும் காந்தியை கொல்கிறார்கள். ஆனால் எத்தனை முறை கொன்றாலும் அவர் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கி றார் என்பதே அவரின் சிறப்பு என கோவையில் நடைபெற்ற கருத்தரங் கில் கவிஞர் நந்தலாலா உரையாற் றினார்.  மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழுவின் சார்பில் கோவை தாமஸ் அரங்கில் செவ்வாயன்று ”மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் மத நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கு” நடைபெற்றது. இக்கருத் தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் என்.சின்னசாமி தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் எஸ்.சந் திரன் வரவேற்புரையாற்றினார். இக் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங் கத்தின் மாநில துணைத் தலைவரான கவிஞர் நந்தலாலா பங்கேற்று சிறப் புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காந்தி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. யார் காந் தியை விமர்சிக்கவில்லை. இந்திய பொதுவுடமை தலைவர்கள் இஎம்எஸ், ஜோசி, தந்தை பெரியார், பகத்சிங் போன்ற போற்றக்கூடிய பல தலைவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களும் காந்தியை நேசிக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு. சமீபத்தில் உத்தரபிரதேச மாநி லத்தில் இந்துத்துவ அமைப்பை சார்ந்த ஒருவர் காந்தியின் உருவ பொம்மையை வைத்து சுட்டுக் கொல்கிற காட்சி வெளியானது. செத்து போனவரை உயிரோடு இருப்பவன் ஒருவர் சுட்டுக்கொல் கிறார் என்றால் அவர் சாகவில்லை என்றுதானே அர்த்தம். இந்துத்துவ வாதிகளுக்கு உள்ள பிரச்சனை என்ன வென்றால் எத்தனை முறை சுட்டாலும் காந்தி செத்துப்போகமாட்டேன் என் கிறாரே என்பதுதான். ஏனென்றால் காந்தியின் ஒட்டுமொத்த வாழ்வின் கடைசி மூன்றாண்டுகள், அவரை விமர்சித்தவர்கள் கூட தோளில் தூக்கிவைத்து கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இந்துத்துவவாதி களின் கருத்துக்கு நேர் எதிர் நின்று சமர் செய்ததாகும். ஆகவேதான் காந்தி சுடப்பட்டார் என்கிற செய்தி வந்தவுடன் பெரி யார் இனி காந்தி தேசம், காந்தி நாடு என்று அழையுங்கள் என்றார். காந்தி தனிமனிதன் என்கிற வகையிலும் அனைவரின் உள்ளங்களிலும் வாழ்கிறார், உலகிற்கு வழிகாட்டியா கவும் திகழ்கிறார். நமக்கும் அவர்க ளுக்கும் உள்ள பிரச்சனை என்ன வென்றால் அவர்கள் எப்படியாவது காந்தியை சாகடிக்க பார்க்கிறார்கள். நாம் எப்படியாவது காந்தியை உயிர்ப்பிக்க ஆசைப்படுகிறோம். அதுதான் இருவருக்குமான பிரச் சனை. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இக்கருத்தரங்கில் சங்க நிர்வாகிகள் சி.வி.மீனாட்சி சுந்தரம், என்.அரங்கநாதன், பி.சுரேந் திரன், கே.ராமசாமி, எஸ்.கருணா நிதி, வி.வெங்கட்ராமன் உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில்,  ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட பொருளாளர் ஏ.குடியரசு நன்றி கூறினார். கருத் தரங்கில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

உதகை

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் உதகையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின சிறப்பு கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எச்.இ.சஞ்சீவி ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தலைவர் கே.ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கருணாகரன், கூடலூர் வட்ட கிளை பொருளாளர் எஸ்.தங்க ராஜ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மேலும், அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ஆசரா, கருவூல கணக்குத் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விசுவ நாதன், எல்ஐசி ஊழியர் சங்க நிர் வாகி எச்.கோபால் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முடிவில், ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பொது.இராமன் குட்டி நன்றி கூறினார். முன்னதாக, இக்கருத்தரங் கில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு மதச்சார் பின்மை பாதுகாப்பு  உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

ஈரோடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா மதநல்லிணக்க  சிறப்பு கருத்தரங்கம் புதனன்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் என்.மணிபாரதி வரவேற்றார். மக்கள் சேவை மையத்தின் மாவட்டத் தலை வர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் கருத் தரங்கத்தை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பால சுப்ரமணியன் நன்றி கூறினார். இதில்,  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.