tamilnadu

img

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை திட்டத்தில் சம்பளம் பாக்கி

உடுமலைபேட்டை,டிச.18- நூறு நாள் வேலை திட்ட தொழி லாளர்களுக்கு கடந்த நான்கு மாதங் களாக சம்பளம் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் புதனன்று மடத் துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை முற்றுகையிட்டனர். மடத்துகுளம் ஊராட்சி பகுதியில்  நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டதின் கீழ் பணியாற்றும் ் தொழி லாளர்களுக்கு, கடந்த நான்கு  மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதுதொடர்பாக பல முறை  ஊராட்சி நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு சென்றபோதும், தற் போது வரை எந்த தொழிலாளர் களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. மேலும் வேலைக்கு வரும் தொழி லாளர்களுக்கு வேலை வழங்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.  இத்தகைய போக்குகளை கண் டித்தும், உடனடியாக மாவட்ட நிர் வாகம் இந்த பிரச்சனையில் தலை யிட வலியுறுத்தியும் அகில இந்திய  விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் தலைமையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மடத்துகுளம் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.