திருப்பூர் போராட்டத்தில் கே.கனகராஜ் பேச்சு
திருப்பூர், மார்ச் 3 - மத்திய ஆட்சியில் இருப்போர் நேர்மையற்றவர்கள், தந்திரம் மிக்கவர்கள். அவர்கள் இந்து, முஸ்லிம் என்ற அடிப்படையில் பிளவு ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடியவர்கள். எனவே இவர்களது ஆபத்தான நடவடிக்கைகள் குறித்து பொது சமூகத்தில் உரையாடலைக் கொண்டு செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறினார். திருப்பூர் அறிவொளி சாலையில் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்ட மைப்பு, குடியுரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. திங்களன்று 16ஆவது நாளாக நடை பெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங் களை ரத்து செய்ய வைப்பதோ, அவர்க ளைப் பின்வாங்கச் செய்து, பாஜக ஆட்சியைத் தோற்கடிப்பதோ மட்டும் போதுமானதல்ல. முன்பு ஒரு முறை பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த போது, அத்வானியிடம் அந்த வெற்றி பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் எங்களுக்கு இந்த வெற்றி பெரிதல்ல, பொது சமூகத்தைக் கைப் பற்றுவதுதான் எங்களுக்கு உண்மை யான முழு வெற்றியாகும் என்று கூறினார். ஆக, இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் பொது சமூகத்தில் ஒரு உரையாடலை உருவாக்கி இருக்கின்றனர். அதை மதரீதியாக முஸ்லிம் - இந்து என்ற தளத்தில் நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்பவே ஊடகங்களிலும் குறிப்பிட்ட போராட் டங்கள் மட்டும் காட்டப்படுகின்றன. ஜாமியா மிலியா, அலிகார் பல்கலைக் கழகங்களில் மட்டும் தொடர்ந்து போராட்டம் நடப்பதாகக் காட்டு கின்றனர். இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்திலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இந்து, முஸ்லிம் என அனைத்து சமுதாய மாணவர்களும் படிக்கின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து சேர்ந்து போராடு கின்றனர். அதை மறைத்துவிட்டு முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் என்றும், இந்து பல்கலைக்கழகம் என்றும் மதரீதியாக பிரித்துக் காட் டும் வேலையை ஊடகங்கள் செய் கின்றன.
எனவே நாம் பொது சமூகத்துடன் உரையாட வேண்டும். இதன் ஆபத்து கள் பற்றி விரிவாக விவாதித்துப் புரிய வைக்க வேண்டும். மத்திய ஆட்சியில் இருக்கும், இந்துத்துவவாதிகள் நேர்மையற்றவர்கள், தந்திரக்காரர் கள். அவர்கள் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்காதவர்கள். குடியுரி மைத் திருத்தச் சட்டத்தை முன் மொழிந்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது சொன்ன இரு விசயங் களை மட்டும் எடுத்துப் பார்த்தாலே அவர்கள் எவ்வளவு நயவஞ்சகமாக பிரச்சனையை திசை திருப்புவார்கள் என்பதை அறியலாம். இந்த நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது காங்கிரஸ் என்று அவர் சொன்னார். ஆனால் இந்த நாடு இரு தேசங்களாகத்தான் இருக்க முடியும் என்று 1924இல் முதலில் சொன்னவர் சாவர்க்கர். அதற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முகமது அலி ஜின்னா இரு தேசங்கள் என்று பேசினார்.
அதேபோல் பாகிஸ்தானில் 23 சதவிகிதமாக இருந்த இந்து சிறு பான்மையினர் தற்போது 3.7 சதவிகி தமாக குறைந்துவிட்டனர் என்று அமித்ஷா சொன்னார். ஆனால் நாடு பிரிவினையடைந்த பின் 1948இல் அங்கு இருந்த சிறுபான்மையினர் 3.2 சதவிகிதம் மட்டுமே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 3.4 சதவி கிதமாகவும், தற்போது 3.7 சதவிகி தமாகவும் சிறுபான்மை மக்கள் தொகை அங்கு உள்ளது. ஆனால் போகிறபோக்கில் அமித்ஷா சொன்ன அந்த அரை உண்மையைக் கேட்கக் கூடிய இந்து மத நம்பிக்கை கொண்ட ஒருவருக்கு என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்? எனவே பொது சமூகத்தில் நாம் இந்த உரையா டலைக் கொண்டு செல்ல வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு 370 சட்டப் பிரிவை ரத்து செய்தது வெறுமனே அந்த மாநிலப் பிரச்சனை மட்டுமல்ல, அது இந்தியாவின் கூட்டாட்சித் தத்து வத்தின் மீதான தாக்குதல். அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்து எழா ததன் விளைவைத்தான் இப்போது சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் பார்க்கிறோம். அரசு நிர்வாகம், காவல்துறை, நீதி மன்றம் என எல்லாவற்றையும் விட மக்கள் மன்றமே பெரியது. மக்கள் மன்றத்திற்குக் கட்டுப்பட்டுதான் மற்ற அரசு நிர்வாக கட்டமைப்பு செயல்பட வேண்டும். எனவே போராடக் கூடாது என்று யார் சொன்னாலும் ஏற்கக் கூடாது. இந்த போராட்டம் முக்கியத் துவம் வாய்ந்தது. அத்துடன் பொது சமூகத்துடன் உரையாலை நடத்தி இதிலுள்ள ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும்.
ஆட்சியாளர்களின் மதரீதியாக பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கின்றனர். அந்த ஒற்றுமையைத் தான் நாம் மென்மேலும் முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். மாநிலங்க ளின் ஒன்றியம் இந்தியா என்ற அரசி யல் சட்ட அடிப்படை தகர்க்கப்படுமா னால் பின்னர் இந்தியா ஒரே நாடாக நீடிப்பது சாத்தியமற்றது. எனவே வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் உருவான இந்தியா வைப் பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல் வோம். இவ்வாறு கே.கனகராஜ் பேசி னார். மேலும், இந்த நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வ ரன், எழுத்தாளர் சம்சுதீன்ஹீரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்ன தாக தற்சார்பு விவசாயிகள் சங்க நிர் வாகி கி.வே.பொன்னையன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.ஏராளமான பெண்கள் உள்பட இரண்டாயிரத்துக் கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பின் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ் மங்க லம் கிராமத்தில் நடைபெற்ற போராட் டத்திலும் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.