tamilnadu

img

சட்ட விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசி, ஆக 28- அவிநாசி வட்ட சட்டப்பணி கள் குழு சார்பில் சட்ட உதவி மற் றும் விழிப்புணர்வு முகாம் அவி நாசி புனித தோமையார் பெண் கள் மேல்நிலைப்பள்ளியில்  புத னன்று சட்ட நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலை மையாசிரியை அல்போன்சா தலைமை வகித்தார். வழக்கறிஞர் யோகேஸ்வரன் முன்னிலையில் அவிநாசி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதி பதியுமான எஸ்.பிரபா சந்திரன் பேசியதாவது, நாம்  எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்பதை வீட்டில் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அதையே வீட்டிற்கு வெளியே சமுதாயத்தில் சொல்லிக்கொடுப் பது தான் சட்டம். நியாயமான பிரச்சனைகள் எதுவாக இருந் தாலும், சட்ட உதவி மையத்தை அணுகினால் சட்ட பணிகள் குழு வில் உள்ள வழக்குரைஞர், புகா ரைப் பெற்று எழுத்து வடிவம் கொடுத்து புகாராக தயார் செய் வார். அது குற்றவியல் வழக்காக இருந்தால் காவல் துறைக்கும், உரிமையில் வழக்காக இருந்தால் சிவில் ரைட்ஸ் பிரிவுக்கும் அனுப்பி வைப்பார். பாதிப்பு நியாயமாக இருக்கும் பட்சத்தில், எந்த செலவும் இல்லாமல் ஒரு வக்கீலை நியமித்து, வழக்குப் பதிவு செய்யப்படும். வழக்குரைஞர் கட்டணத்தையும் சட்ட உதவி மையம் மூலம் அரசாங்கமே கொடுத்துவிடும். ஒரு ஊரில் நீதி மன்றம் என்று இருந்தாலே, அங்கு சட்ட உதவி மையம் இருக்கும். அந்த மையத்தில் நாள்தோறும் அலுவலர் நியமிக்கப்பட்டு பணி யில் இருப்பார்.  அதேபோல் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தைரிய மாகப் பெற்றோர்களிடம் கூற வேண்டும். முடியாவிட்டால் ஆசி ரியர்களிடம்  அல்லது நேரிடை யாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண் டும் என்றார்.  இதையடுத்து   ஏராளமான  மாணவிகள் சட்ட உதவிகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தனர்.