tamilnadu

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

நாமக்கல், நவ.15- நாமக்கல் மாவட்டம், நாமகிரிப் பேட்டை அருகே அரசு பள்ளியில் மாணவி களுக்கு  ஆபாச படம் காட்டிய ஆசிரியர் மீது  போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட் டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், நாமகிரிப் பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோயில் அரசு நடுநிலைப்பள்ளி பணி புரியும் கணித ஆசிரியர் சுரேஷ் (37). இவர்  அப்பள்ளி படிக்கும் 8ம் வகுப்பு மாணவி களுக்கு ஆபாச படங்களை காட்டியதுடன், பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். அது மட்டுமின்றி சாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  விசாரணைக்கு உத்தரவிட்டார். இதன்பின் மாணவிகள் 8 பேர் கொடுத்த புகாரின்  அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆசிரியர் சுரேஷை பணி யிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மெக ராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா கொங்களம்மன் பள்ளிக்கு சென்று நேரடி யாக விசாரணை மேற்கொண்டார். இதில் பள்ளி மாணவிகளிடம் மட்டுமின்றி தலை மையாசிரியர், முன்னாள் தலைமையாசிரி யர்கள் ஆகியோரிடமும் விசாரித்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில் மாணவிகளின் பெற் றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் சுரேஷ் மீது புகார்  அளித்தனர். அதன்பேரில், ஆபாச படம்  காட்டிய சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

;