tamilnadu

img

எல்ஐசி பாலிசிதாரர் சேவை, வசூல் மையம் துவக்க விழா

தருமபுரி, நவ.18- தருமபுரியில் எல்ஐசி பாலிசிதாரர் சேவை,வசூல் மையம் துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில், இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழக பாலிசிதாரர் சேவை மற்றும் வசூல் மையம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய காப்பீட்டுக்கழக முதன்மை ஆலோசகரும், மண்டல மேலா ளர் குழு உறுப்பினருமான சி.கருணாநிதி தலைமை வகித்தார். எல்ஐசி தருமபுரி கிளை முதுநிலை மேலாளர் டி.வெங்கட்டேசன் சேவை மற்றும் வசூல் மையத்தை துவக்கி வைத்தார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சேலம் கோட்ட இணைசெயலாளர் ஏ.மாதேஸ்வரன், போக்குவரத் துக் கழக ஊழியர்சங்க மாவட்ட தலைவர் எஸ்.சண்முகம் மற்றும் எல்ஐசி முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர். முன்னதாக, புதிதாக துவக்கப்பட்ட எல்ஐசி சேவை மற்றும் வசூல் மையத்தில் பாலிசிகள் சம்மந்தப்பட்ட அனைத்து சேவைகள் விரைவாக செய்துதரவும், புதியதாக எல்ஐசி பாலிசி குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, இதனை பாலிசிதாரரும், பொதுமக்களும் பயன் படுத்திக் கொள்ளமாறு எல்ஐசி கிளை முதுநிலை மேலா ளர் டி.வெங்கட்டேசன் கேட்டுக்கொண்டார்.