tamilnadu

img

இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவராக கே.கணேசன் பதவி ஏற்பு குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை அளிப்பதாக உறுதி

திருப்பூர், ஜன. 6 - திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த கே.கணேசன் திங்க ளன்று பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக் கப்படும் என்று அவர் தெரிவித் தார். இடுவாய் ஊராட்சிமன்ற அலு வலக வளாகத்திற்கு முன்பாக திங்களன்று காலை 10 மணியள வில், இடுவாய் கிராம உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கி யதும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.கணேசன் அரசியல் அமைப்புச் சட்டப்படி நேர்மை யாக செயல்படுவதாக உறுதி யேற்றுக் கொண்டு பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து 1ஆவது வார்டு உறுப்பினராக பரமசிவம், 2ஆவது வார்டு சர்மிளாதேவி செல்வராஜ், 3ஆவது வார்டு ஆர்.ஈஸ்வரி, 4ஆவது வார்டு ரமேஷ், 5ஆவது வார்டு பூவதி, 6ஆவது வார்டு டி.ஈஸ்வரி, 7ஆவது வார்டு சுப்பிரமணியம், 8ஆவது வார்டு எம்.கணேசன் மற்றும் 9ஆவது வார்டு உறுப்பினராக பரமேஸ் வரி ஆகியோர் பதயேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலை வர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்திப் பேசினர். அப்போது இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப் பதுடன், அரசியல் வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செயல்படுவதுடன், முன்மாதிரி ஊராட்சியாக இடுவாய் ஊராட் சியை மாற்றிக் காட்ட வேண் டும் என்று வாழ்த்தினர். நிறைவாக கே.கணேசன் ஏற்புரை ஆற்றும்போது, இடு வாய் ஊராட்சியில் அனைத்துப் பகுதிகளுக்கும் பாரபட்சம் இல் லாமல் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதற்கு முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இரண்டாவதாக பயன் பாடில்லாமல் இருக்கும் பொதுக் கழிப்பிடங்களை பயன்பாட் டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துத் தரப் பினரையும் அரவணைத்து இடு வாய் ஊராட்சி மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். இவ்விழாவில் அனைத்துக் கட்சியினர், முன்னாள் உள்ளாட் சிப் பிரதிநிதிகள், இடுவாய் ஊர் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். ஊராட்சி மன்றச் செயலர் ரமேஷ் நன்றி கூறினார். தேசிய கீதத்து டன் விழா நிறைவடைந்தது.

;