tamilnadu

கோவையில் ஜோதிடர் கொலை வழக்கு - 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை, மே 28–கோவை வீரகேரளம் பகுதியில் ஜோதிடர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.கோவை தடாகம் சாலையில் உள்ளகுமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் சந்தோஷ். இவர் கடந்த ஞாயிறன்று அவரது தாயாருடன் வீரகேரளம் அருகே மோட்டர் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார். அப்போது,அவரை வழிமறித்த கும்பல் ஒன்று வாகனத்தில் இருந்து அவரை கீழே தள்ளி கத்தியால் சரமாரியாகக் குத்தி, கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இதனையறிந்த காவல்துறையினர் சந்தோஷின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குண்டு ரமேஷ், விஜயகுமார், மது, கர்ணபிரசாத் ஆகிய 4 பேர் கோவை நீதிமன்றத்தில் செவ்வாயன்று சரணடைந்தனர்.  நீண்ட காலமாக இவருடைய சித்தப்பாவுடன் இணைந்து பணியாற்றி வந்தசந்தோஷ், குடியரசுக் கட்சியிலிருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்புபாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவருடன் சேர்ந்து குடியரசுகட்சியைச் சேர்ந்த  மேலும் பலரையும்பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துஉள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தோஷின் உறவினர் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த கும்பல் இவரைகொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.