tamilnadu

img

ஜீவா நகர் மக்களோடு நிற்பேன் பி.ஆர்.நடராஜன் எம்.பி.யின் உறுதியால் பின்வாங்கிய மாநகராட்சி

கோவை, அக்.1– எளிய மக்கள் வசிக்கும் ஜீவா நகர் குடியிருப்புகளை காலி செய்ய பொக்லைன் இயந்திரத்தோடு வந்த  கோவை மாநகராட்சி அதிகாரி கள், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின் கடும் எதிர்ப் பால் பின்வாங்கி சென்றனர்.  கோவை - மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். கடந்த 1988 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஜீவா நகர்  பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடு கள் கட்டுவதற்கு கடன் வழங்கி யுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணை தொகைகளையும் கடந்த 30 ஆண்டுகளாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்,  சிலர் ஜீவா நகர் அருகில் உள்ள தங்களது நிலத்திற்கான மதிப்பை  உயர்த்துவதற்காக திட்டமிட்டு  தவறான தகவல்களை அளித்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமான உத்தரவை பெற்றுள் ளனர். இதனையடுத்து இப்பகுதி யில் இருப்பவர்களை காலி செய் யக்கோரி கோவை மாநகராட்சி  மற்றும் நகரமைப்பு துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின் றனர்.  மின் இணைப்புகளை துண்டிப் பது, குடிநீர் விநியோகத்தை தடுப் பது உள்ளிட்ட அடிப்படை வசதி களை தராமல் கோவை மாநகராட்சி இப்பகுதி மக்களை புறக்கணித்து வருகிறது. இதனை எதிர்த்து இப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். இருப்பி னும் கோவை மாநகராட்சி அதிகாரி கள் திடீர் திடீரென பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து வீடு களை இடிப்பது போன்ற நடவடிக் கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று ஜீவா நகர் குடியிருப்புகளை இடிப் பதற்கு கோவை மாநகராட்சி திட்டமிட்டது. இதனையறிந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஜீவாநகர் குடியி ருப்பு பகுதிக்கு சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து கொண்டார். இதனையடுத்து ஏராளமான  காவல்துறையினர் மற்றும் பொக் லைன் இயந்திரத்தோடு வந்த  மாநகராட்சி அதிகாரிகள் பி.ஆர்.நட ராஜன் எம்.பி. போராட்டத்திற்கு தலைமை தாங்கி அமர்ந்துள்ளதை கண்டு செய்வதறியாது திகைத் தனர். இதனையடுத்து மாநகராட்சி  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத் தினர். அதிகாரிகளோடு பி.ஆர்.நடரா ஜன் பேசுகையில், இப்பகுதி நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதியல்ல, மாறாக வழக்கின் தீர்ப்பின் காரண மாக இடிக்க வந்துள்ளீர்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சிய ரும் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டலாம் என தெரிவித்துள்ளார். அதற்குள் காவல் துறை மற்றும் பொக்லைன் இயந்தி ரத்தை கொண்டு வந்து மக்களை நிர்பந்தப்படுத்தி வீடுகளை இடிப்பதன் அவசியம் என்ன. இத னையும் மீறி இடிப்பேன் என்றால் என்னை மீறித்தான் இடிக்க வேண் டும். தடியடி நடத்தி கைது செய்தா லும் இங்கிருந்து செல்லமாட்டேன். ஜீவா நகர் மக்களில் ஒருவனாக நிற்பேன் என்றார். மேலும் இதனைத்தொடர்ந்து ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்ச னைக்கு நீங்கள்தான் பொறுப்பு  என்று உறுதிபட தெரிவித்தார்.  சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட் டத்தையடுத்து கோவை மாநக ராட்சி அதிகாரிகள் வேறுவழி யின்றி திரும்பிச்சென்றனர்.தங்கள் வீடுகள் மீண்டும் ஒருமுறை பி.ஆர்.நடராஜன் எம்.பி.யின்  முயற்சியால் பாதுகாக்கப்பட்டதை யடுத்து அனைத்து மக்களும் அவருக்கு நன்றி தெரிவித்தனர். முன்னதாக, இந்நிகழ்வின் போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் யு.கே.சிவஞானம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கே.புருசோத்தமன், அஷ்ரப்அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலையரசன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மின்சாரம் தாக்கி  இருவர் பலி
இந்நிலையில், பாப்பாத்தி என்பவர் வீட்டை காலி செய்யும் போது, அவரது உறவினர்களான வெங்கிட்டாபுரம் நேதாஜி நகர்  பகுதியை சேர்ந்த ஜெயராம் (29)  மற்றும் காரமடை மங்கலக்கரைப் புதூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய இளைஞர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டிருந்த இரு இளை ஞர்கள் மின்சாரம் தாக்கி உயி ரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. இதுகுறித்து தக வலறிந்து அங்கு வந்த காவல்துறை யினரும், மின்சார வாரிய ஊழி யர்களும் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் தான் இளை ஞர்கள் இருவரும் உயிரிழந்ததா கக் கூறி அவர்களது உறவி னர்கள் மற்றும் அப்பகுதியினர் மேட்டுப்பாளையம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட் டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு வந்த துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவலர்கள், அவர்களை சமாதானப்படுத்தி னர்.