tamilnadu

img

தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்து ஜன. 8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க சூளுரை

கோவை, நவ. 26-    தொழிலாளர், மக்கள் விரோத மோடி அரசின் கார்ப்பரேட் ஆத ரவு கொள்கையை கைவிட வலி யுறுத்தி ஜன. 8 ஆம் தேதியன்று  நடைபெறும் அகில இந்திய  வேலைநிறுத்தப் போராட்டத்தை  கோவையில் வெற்றிகரமாக்கு வது என அனைத்து மத்திய  தொழிற்சங்கங்கள் மற்றும் வர்க்க  வெகுஜன அமைப்புகளின் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எல், ரயில்வே உள் ளிட்ட மத்திய அரங்கங்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் உள் ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று கோவையில் சிஐ டியு மாவட்டக்குழு அலுவலகத் தில் ஐஎன்டியுசி தலைவர் பால சுந்தரம் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி நிர்வாகிகள் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் தங்கவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், எம்எல்எப் மு.தியாக ராஜன், எச்எம்எஸ் ராஜாமணி, மதியழகன் எல்ஐசி ஊழியர் சங்க  துளசிதரன், விவசாயிகள் சங்கத்தின் பழனிச் சாமி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின்  செல்வராஜ், வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் சையது இப்ராஹிம், மகேஸ்வரன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு, மத்திய பாஜக அரசின் கொள்கை களால் இந்திய நாட்டின் பொருளா தாரம் கடும் நெருக்கடியில் சிக்கி யுள்ளது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிக ரித்து வருகிறது. இதன்காரண மாக இந்திய மக்கள் பெரும் துய ரத்திற்கு உள்ளாகி வருகின் றனர். நெருக்கடிக்கு தீர்வு காண இயலாத மத்திய அரசு, கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவை தீவிரப்படுத்தி யுள்ளது. இதனை கண்டித்து எதிர் வரும் ஜனவரி 8 ஆம் தேதியன்று அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.  இப்போராட்டத்தை கோவை மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிட லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களை திரட்டுவது. முன்ன தாக, இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மக்கள் மத்தியில்  கொண்டு செல்லும் வகையில் விரிவான பிரச்சார இயக்கங்கள், ஆயத்த மாநாடு போன்றவற்றை நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.