tamilnadu

ஆனைமலை தாலுகாவில் ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜமாபந்தி

ஆனைமலை, ஜூன் 16- ஆனைமலை தாலூகாவில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜமாபந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலூகாவில் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி முதல் தனித்துணை வட்டாட்சியர் த. வெங்கடாசலம் (பொறுப்பு) தலைமையில் ஜமா பந்தி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும்.  முதல் நாள் செவ்வாயன்று தொடங்கும் பெத்த நாயக்கனூர் மற்றும் தென்சித்தூர், சோமந்துரை சித்தூர், தென்சங்கம்பாளையம், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன் புதூர், காளியா புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், இரண்டாம் நாளான புதனன்று ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக் கன்பாளையம், சிங்காநல்லூர், அம்பராம்பாளை யம், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம் மற் றும் பெரியபோது ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும். மேலும், மூன்றாம் நாளான ஜூன் 20 ஆம் தேதி சமத்தூர், எஸ்.பொன்னாபுரம், சின்னாம்பாளை யம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி,  நல்லூர், தளவாய்ப்பாளையம், கம்பாலப்பட்டி, தொண்டாமுத்தூர், கோட்டூர், அங்கலக்குறிச்சி, துறையூர், ஜல்லிப்பட்டி மற்றும் அர்த்தநாரிபாளை யம் ஆகிய பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடத்தப்படும். இதில் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வால்பாறை
இதேபோல், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் தலைமையில் ஜூன் 18 ஆம்
தேதியிலிருந்து ஜூன் 20 ஆம் தேதி வரை வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.