உடுமலை, ஜுன் 27- உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி முதல் 27ம் தேதி வரை உடுமலை மற்றும் குடிமங்கலம் வருவாய் கிரா மங்களுக்கு ஜமாபந்தி நடை பெற்றது. இதில் அதிகப் படியான மனுக்களாக முதி யோர் உதவி தொகை கேட்டும், விவசாயிகள் தங்க ளுடைய நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று விண் ணப்பம் தரப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற ஜமாபந்திக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கிராமங்கள் தோறும் பொது அறிவிப்பு செய்யப்படும். மேலும் வட்டாட்சியர் அலுவ லகம் விழா நடப்பது போல் பொது மக் களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் சரி செய்வது வழக்கம். இதில் பொது மக்கள் அதிகளவில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை விண்ணப்ப மாக தருவார்கள். அதில் பல மனுக்கள் உடனடி தீர்வு எட்டப்படும். தற்போது நடைபெற்ற ஜமாபந்தியில் முதியோர் உதவி தொகை ஏற்கனவே கிடைத் தவர்களுக்கு தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது குறித்த விண்ணப்பம், புதிதாக உதவி தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்தவர்கள் தான் அதிகம். மேலும் விரைவில் முடிக்க வேண்டிய பட்டா மாறுதல்கள் வருவாய்த்துறை அதிகாரி களின் செயல்படாத தன்மையால் ஜமா பந்தியில் பட்டா மாறுதல் விண்ணப்பம் அதிகளவில் இருந்தது. கடந்த இரண்டு வாரங்கள் பெயரளவில் நடைபெற்ற ஜமாபந்தியில் பெற பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த முறை நடக்கும் ஜமா பந்தியாவது மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.