தருமபுரி, பிப்.18- உழைக்கும் மக்களின் உரிமை காக்க மார்ச்.6 தேதியன்று நாடு தழுவிய சிறைநிரப்பும் போராட் டத்தை முன்னிட்டு ஆயத்தக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவல கத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சி.கலாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணை தலைவர் சந்திரன், மாநில செய லாளர் சி.நாகராசன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் சி.அங்கம்மாள், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்டத் தலைவர் ஏ.தெய் வானை, பொருளாளர் எம்.ஈஸ்வரி, ஆஷா திட்ட மாவட்டத் தலைவர் எஸ்.மேனகா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.
பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியிடங்களில் விசாகா கமிட்டி அமைக்கவேண்டும். பெண் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமமான ஊதியம் வழங்கவேண்டும். திட்டப்பணி யாளர்கள் அனைவரையும் தொழி லாளர்களாக அங்கிகரிக்க வேண்டும். சட்டமன்றம், பாராளு மன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்ச்.6ஆம் தேதியன்று நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்ஒருபகுதியாக தருமபுரியில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்தில் பெருமளவு கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்வது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.