மேட்டுப்பாளையம் நடூர் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அறிவித்த நிவாரணங்கள் உடனடியாக அவர்களுக்கு சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று போராடியவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் காவல்துறை யினரின் நடவடிக்கையை கைவிட வேண்டும். வழக்கறிஞர்கள் நாகை திருவள்ளுவன், வெண்மணி, கார்க்கி உள்ளிட்ட 24 பேர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிய, அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தோர் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.