பொள்ளாச்சி, டிச. 9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கருக்கல் திரைப்பட இயக்கம் சார்பில் நூல் அறிமுகம் மற்றும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி யிலுள்ள அரிமா சங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கருக்கல் திரைப்பட இயக்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச-வின் மாநிலக் குழு உறுப்பினர் அ.கரீம் தலைமை வகித்தார். இதில் கூத்துப்பட்டறை நடிப்பு ஆசிரியரும், கருக்கல் திரைப்பட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கருக்கல் சுரேஷ்வரன் எழுதிய திரைக் கதையின் கருவும் உருவும் எனும் நூலினை தமுஎகச கௌரவத் தலைவர் ச. தமிழ்ச் செல்வன் அறிமுகம் செய்து உரையாற் றினார். இதனையடுத்து நூலின் ஆசிரியர் கருக்கல் சுரேஷ்வரன் ஏற்புரையாற்றினார். முன்னதாக பொள்ளாச்சி தாலுகா செயலாளர் சூரியபிரகாஷ் வரவேற்று பேசினார். தமுஎகச பொறுப்பாளர் கீதா பிரகாஷ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். முடிவில் கருக்கல் திரைப்பட இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா சரேஷ்வரன் நன்றி தெரிவித்தார். இதில் தமுஎகச பொள்ளாச்சி சசிதரன் மற்றும் பிபி மகேந்திரன் கவிஞர் அம்சப்ரியா, சோழநிலா, யோகேஷ்வரன், மௌனம் இரமேசு, முருகானந்தம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.