tamilnadu

img

திருப்பூர் ஆட்சியரகத்தில் மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

திருப்பூர், அக். 14 – திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க வசதியாக 97000 41114 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை மாவட்ட ஆட் சியர் விஜய கார்த்திகேயன் திங்களன்று அறிமுகம் செய்து வைத்தார். மேற்படி வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகைப்படம், வீடியோ அல்லது புகார் கடிதம் அனுப்பினால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரி வித்தார். இந்த 24 மணி நேர சேவையை கவனிப் பதற்கு தனி அலுவலர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் கிடைக்கப் பெறும் புகார்களை குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்து புகார், குறைக ளின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மக்களின் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே தொலைதூரத் தில் இருந்து மக்கள் நேரடியாக ஆட்சியரகத்துக்கு வருவதற்கான கால நேர விரயம், பொருட் செலவு தவிர்க்கப்படும். எனவே குறித்த நேரத்திலான இந்த நிர்வாக சேவையை  மக்கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறினார்.