tamilnadu

img

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

திருப்பூர், டிச.18 - ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்க ளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுக்குத் தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் முன்னி லையில், திருப்பூர் மாவட்ட தேர் தல் பார்வையாளர் ஆர்.கஜலட்சுமி தலைமையில் புதனன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில், மாவட்ட தேர் தல் பார்வையாளர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர்கள், 265 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கான தேர்தல் நடைபெறு கிறது. இதற்காக திருப்பூர் மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு 28 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு அடிப்படை வச திகளான குடிநீர், கழிப்பறை, மின் சார வசதி  ஆகியவற்றை செய்திட வேண்டும்.மாற்றுத்திறனாளி களுக்கு சாய்தள பாதை, சக்கர நாற்காலி வசதி செய்வதுடன் அவர் களுக்கு உதவிட தன்னார்வலர் களை பயன்படுத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சவாடிகள் என கண்டறியப்பட்டுள்ளவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இறுதி கட்ட வேட்பாளர் விபரங்களை வெளியிட்டதுடன் உடனடியாக வாக்குச்சீட்டுகள் அச் சடிக்கும் பணி துவங்க வேண்டும்.  தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்களை தெரிந்து கொள்ள வேட்பாளர்களுக்கு கூட் டம் நடத்த வேண்டும். மண்டல அலு வலர்களுக்கும் கூட்டம் நடத்து வதுடன், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தும் வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை அனுப்பி வைப்பது, வாக்கு எண் ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டு வழங்குதல் உள்ளிட் டவை தொடர்பாக தேர்தல் பார்வை யாளர் கஜலட்சுமி அறிவுறுத்தி னார். இதில் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.