tamilnadu

img

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு

கோவை, ஆக. 19 - கோவை வடக்கு மண்டலத்தில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் அப்பகுதி மக்களிடம் சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவப்  பரிசோதனை செய்திட வேண்டும்.

50 வயதிற்கு மேற்பட் டவர்கள் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து இராமகிருஷ்ணாபுரத்தில் குடிநீர் வடி கால் வாரியம் மூலம் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்தார்.