tamilnadu

img

ஏற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

ஏற்காடு, செப். 23- ஏற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.   சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அவர் ஏற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும்  பேருந்து நிலையம் பின்புறம் பொது வெளியில் மக்கள் சிறுநீர் கழித்து அசுத்தமாக இருப்பது குறித்து பார்வையிட்டார். பின்னர் இது குறித்து முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர்  சி.அ.ராமனிடம் பேருந்து நிலையத்தை தூய்மை யாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை மிகவும் பழமையாகிவிட்டதால், அதை இடித்து விட்டு, புதிய கழிவறை கட்டும்படியும், கால்நடைகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து அசுத்தம் ஏற்படுத் துவதை தடுக்கும் வண்ணம் செய்ய வேண்டிய வழி முறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

;