கோவை,டிச.10 – கோவை வந்த தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நேரிடையாக எவ்வித ஆய்வும் மேற்கொள்ளாமல், கலந்துரையாடல் நிகழ்வை மட்டும் நடத்தி கிளம்பிச் சென்றதால் கல்வித்துறையினர் பெரும் ஏமாற்ற மடைந்தனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நிய மிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தலைமையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக் கான கலந்துரையாடல் மற்றும் பள்ளிகள் குறித்த ஆய்வு தமிழகத்தில் உள்ள ஒன்பது கல்வி மண்டலங்களில் நடப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன்ஒருபகுதியாக, கோவை மண்டலத்திற்குட்பட்ட ஆசிரியர்க ளுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் திங்களன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலிருந்து 20 தலைமை யாசிரியர்கள், 20 ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தில் பங்கேற்ற பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் குறித்தும், பள்ளி மேலாண்மை குழு செயல்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பள்ளி கல்வி அலுவலர்களுடனான கலந்துரை யாடலின் போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் கல்வி தரம் எவ்வாறு உள்ளது என்பதையும், மாவட்ட வாரியான தேர்ச்சி சதவிகிதம், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அத்தோடு, அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார். முன்னதாக, கோவை மாவட்டத்தில் ஒரு நடு நிலைபள்ளி, ஒரு உயர்நிலை பள்ளி மற்றும் 25 மேல்நிலை பள்ளிகளின் கட்டிடங்கள் பலவீன மாக இருப்பதாகவும், இதனை சரி செய்து தர வேண்டும் என கல்வித்துறை சார்பில் பொதுப் பணித் துறையினரிடம் அறிக்கை அளித்தி ருந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வி ஆணை யர் கோவையில் ஆய்வு மேற்கொள்ள வருவதை யொட்டி இதற்கான உத்தரவு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேரிடையாக எவ்வித ஆய்வும் மேற்கொள் ளாத ஆணையர், தனியார் கல்லூரியில் அமர்ந்து கொண்டு கல்வித்துறை சார்ந்தவர்களை வரவழைத்து கலந்துரையாடல் நிகழ்வை மட்டும் நடத்தி கிளம்பிச் சென்றார். இதனால் கோவை மாவட்ட கல்வித்துறையினர் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
பராமரிப்பற்ற அரசு பள்ளிகளின் கட்டிடங்கள்
இந்நிலையில் மாநில பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யனை சந்தித்தது பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகி கள் கோரிக்கை மனு அளித்தனர். இதில், கோவை மாவட் டத்தில் அரசு மற்றும் உள்ளாட்சிகளின் பராமரிப்பில் உள்ள துவக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. பள்ளி களில் தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி வளாகம் குப்பை மேடாகவும், விளையாட்டு மைதானங்கள் புதர் மண்டியும் உள்ளன. அதேபோல் வெளிச்சுவர்கள் பாதுகாப்பின்றி உள்ளது. குடிநீர் தொட்டிகள் தூய்மையற்ற நிலையிலும், சத்துணவு சமையலறை, உணவுக்கூடம் போன்ற இடங்களில் கழிவுநீர் குழாய் இல்லாமலும் உள்ளன. போதுமான கழிப்பறை வசதி, கழிவறை களில் நாப்கின், இன்சிரேட்டர், மின் இணைப்பு ஆகி யவை இல்லாத நிலையிலேயே பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன.எனவே பள்ளிகளில் போது மான அடிப்படை வசதிகள் மற்றும் பணியா ளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது.