உதகை, பிப்.28- நீலகிரி மாவட்டத்தில் கடந்த வருடம் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இடங் களை வெள்ளியன்று முதன்மை செயலரும், வரு வாய் நிர்வாக ஆணைய ருமான டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட் சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட இந்தி ரா நகர் பகுதியில் ரூ.1.02 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் 120 தற்காலிக வெள்ள பாதுகாப்பு மைய கட்டிடங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.