tamilnadu

img

பலன் தராத "புகார் பெட்டி"

அவிநாசி, ஜூலை 18- அவிநாசி  கிராமப்பகுதிகளில் காவல் துறையினர்  சார்பில்  துவங்கப்பட்ட ‘புகார் பெட்டி’ திட்டம்  எதிர்பார்த்த பலன்  தராதவில்லை என பொதுமக்கள் தெரி வித்தனர்.   அவிநாசி கிராமப்புற பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகளவில் நடக் கிறது. இதுதவிர அடிப்படை வசதிகள் நிறை வேற்றக்கோரி நடைபெறும் போராட் டங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்ச னைகள் பரவலாக நிகழ்கின்றன. இவற் றிற்கு தீர்வு காணவும், சுமூகமான சூழ்நிலை ஏற்படுத்தவும் கிராமங்கள் தோறும் மாவட்ட காவல்துறை சார்பில் ‘புகார் பெட்டி’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  அதன்படி, ஊரகப் பகுதி முழுவதும் புகார் பெட்டி வைக்கப்பட்டன. அத்துடன்  ஊரக பகுதியில் இரு காவலர்கள் கண்காணிக்கும் பொறுப்பும் வழங்கப் பட்டது.  அந்த இரு காவலர்களின் புகைப் படம், கைப்பேசி எண்ணும் அடங்கிய அறிவிப்பு பேனர்கள் புகார் பெட்டி அரு கிலே வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகளை மனு வாக புகார் பெட்டியில் இடுமாறு அறிவுறுத் தப்பட்டது. இந்த புகார் மனு தன்மை ஆராயப்பட்டு அந்த துறையின் அதி காரிக்கு புகார் மனு அனுப்பி வைக் கப்படும். மேலும் இந்த புகார் பெட்டியில் வரவேற்பை பொறுத்து  குக்கிராமங்கள் வரை இத்திட்டத்தை விரிவுப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பல்வேறு இடங்களில் வைக் கப்பட்டிருந்த புகார் பெட்டியில் ஒரு மனு கூட வரவில்லை.   இதுகுறித்து காவல்துறையினர் சிலர் கூறியதாவது: புகார் பெட்டி என்பது  பழைய  நடைமுறையாகும். பெரும்பாலான  பொதுமக்கள் புகார்களை 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்து விடு கின்றனர். இதனால் 3 மணி நேரத்தில் சம் பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு புகார்  பற்றிய தகவலறிந்து விசாரணை தொடங்கி  விடுகின்றனர். இதுதவிர, காவல் கண் காணிப்பாளர், காவல் துணை கண்காணிப் பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் கைபேசி எண் மற்றும்  ‘வாட்ஸ்-ஆப்’ மூலமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே காவல் துறையினருக்கு உள்ள பணிச்சுமை காரண மாக புகார் பெட்டியை தொடர்ச்சியாக கண் காணிக்க முடியவில்லை என தெரிவித் தனர்.