உடுமலை, நவ. 27- இந்திய அரசியல் அமைப்பு சட்டத் தின் 69 வது ஆண்டு விழா அரசு உயர் நிலைப்பள்ளியில் உற்சாகமாக கொண்டா டப்பட்டது. உடுமலைப்பேட்டை வட்டம், மலை யாண்டிபட்டணம் அரசு உயர்நிலைப்பள் ளியில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு சட்டமேதை அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மற்றும் ஆசிரியர்கள், ஊர்ப் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அம்பேத்கர் குறித்தும், இந்திய அரசியல் அமைப்பு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டடது. நிறைவாக ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.