tamilnadu

img

சிபிஎம் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா

சேலம், ஆக.16 - சுதந்திர தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா வியாழனன்று நடைபெற்றது.  இந்திய நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலு வலுவகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்தில் கொடி யேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத் தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, எம்.குணசேகரன், மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனக ராஜ், வடக்கு மாநகரச் செய லாளர் எம்.முருகேசன், அலுவலக  செயலாளர் எஸ்.செல்லப் பாண்டியன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். 

நாமக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்செங்கோடு ஒன்றிய, நகர குழுவின் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா  நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதி நாராயணன், நகர செயலாளர் ஐ. ராயப்பன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வேலாயுதம் மற்றும் நகர குழு  உறுப்பினர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.