தமிழகத்தில் மழைவேண்டி
முக்கிய கோவில்களில் யாகம்
வருண ஜபம் வேள்வி
நந்தி பெருமானுக்கு
நீர்நிரப்பி வழிபாடு
மழைவேண்டி பதிகம் ஓதுதல்
ஆனந்த பைரவி
ரூபகல்யாணி
ராகம் கொண்டு
இறைவழிபாடு
சிவனுகோ
சீதளக்கும்பம்
ருத்ராபிஷேகம்
விஷ்ணுவுக்கு
சிறப்பு திருமஞ்சனம்
மாரியம்மனுக்கு
பால்; தயிர்; இளநீர் அபிஷேகம்
வருண சூக்த
வேதமந்திர பாராயணம்
வருண காயத்திரி
மந்திர பாராயணம்
செலவு கணக்கு எழுதிடத்தான்
அறநிலையத்துறையின்
அருமையான யோசனை
கடவுளையே களவாடி
காடுகளை அழித்த கும்பல்
காவியுடன் கைகோர்த்து
கட்கடகட் தந்தியடிக்குது
வருணபகவானுக்கு...
வருணன் எப்பவருவான்
வரம் எப்பத்தருவான்
இலவுகாத்த கிளியாய்
ஏமாந்த சோனகிரியாய்
எம்மக்கள் இருப்பதனால்
சந்திரனிலிருந்து
குழாய் மூலம்
தண்ணீரும் வந்திடுமே
அமைச்சர்களும் அறிவிப்பார்...