tamilnadu

img

செப்.27ல் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து கட்சியினர் பிரச்சாரம்

கோவை, செப்.18- கோவை மாநகராட்சியின் அநியாய சொத்து வரி உயர்வை  கைவிட வேண்டும் என வலியு றுத்தி செப்.27 ஆம் தேதியன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து கட்சியினர் பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியின் அநியாய சொத்து வரி உயர்வை கைவிடக் கோரியும், கோவை மாந கர மக்களின் குடிநீர் விநியோ கத்தை பன்னாட்டு பிரான்சு நிறுவ னமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதை கண்டித் தும் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதியன்று கோவை மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட் டத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் அழைப்பு விடுத்தது. இந்த முழு அடைப்பு போராட் டத்தை வெற்றிகரமாக்கிட புத னன்று  திமுக,  காங்கிரஸ், சிபி எம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், வியாபாரிகள், தொழில் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தனர். முன்னதாக, இந்த இயக்கத் திற்கு திமுக மாநகர் செயலாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் சி.பத்மநாபன்,  மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்த ரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.