கோவை, ஜூன் 18– குடிநீர் பற்றாக்குறையைப் போக்கி, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சின்னவேடம்பட்டி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை, சிவானந்தபுரம் பகுதி யில் நூற்றுக்கணக்கான குடியிருப்பு கள் உள்ளது. இப்பகுதியில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வந்தது. தற்போது ஐந்து நாட்க ளுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. இதனால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. எனவே, குடிநீர் விநியோ கத்தை சீர்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதன்தொடர்ச்சியாக செவ்வா யன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோவை சின்னவேடம்பட்டி குடிநீர் வடிகால் வாரிய அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்த னர். இம்மனுவினை மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் ஜெயகாந்தன், செல்லத்துரை மற்றும் மாதர் சங் கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர் உஷா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மனு அளித்தனர்.