tamilnadu

img

முறையாக இயக்கப்படாத தனியார் பேருந்து சிறைபிடிப்பு

நாமக்கல், அக்.18- ராசிபுரம் அருகே முறையாக வழித்தடத்தில் இயக்கப்படாத தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது புதுப்பாளையம். இக்கிராமத்திற்கு எஸ்ஆர்என் என்ற தனியார் பேருந்து 6 முறை வந்து சென்ற நிலையில், தற்போது 2 முறை மட்டுமே வந்து செல்கிறது.  மேலும் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. இதனால்  கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரி தும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், இதே பகுதியில் இயங்கி வந்த சிற்றுந்து அதற்காக வழங் கப்பட்டுள்ள வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழியில்,  முறையான நேரம் இல்லாமல் ஓட்டுநர் களின் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கப்பட்டு வந்துள்ளது.  இதுகுறித்து கிராம மக்கள் வட்டாரப் போக்கு வரத்து அதிகாரியிடம் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலு வலர், தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து ஓட்டு நர்களிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்தனர். மேலும்,  இனி இதுபோல் தவறு நடந்தால் உரிமம் ரத்து செய் யப்படும் என கூறி ஆணையும் பிறப்பித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஒரு வருடமாகவே தனி யார் பேருந்துகள் வட்டார போக்குவரத்து அதிகாரி கள் ஆணையை  உதாசீனப்படுத்தி மீண்டும் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் குறித்த நேரத்தில் பேருந்தை இயக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் வெள்ளி யன்று புதுப்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த தனியார் பேருந்தை சிறைபிடித்தனர். இது குறித்த தகவலறிந்த ராசிபுரம் காவல்துறையினர், தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தனி யார் பேருந்து முறையாக இயக்கப்படவில்லை  எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். எனினும், இனி இந்த தவறு நடந்தால் தனியார் பேருந்துகள் உரிமத்தை ரத்து செய்து விட்டு, அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும்  என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து கலைந்து சென் றனர்.