tamilnadu

தாராபுரம் ,கோவை மற்றும் தாராபுரம் முக்கிய செய்திகள்

தாராபுரத்தில் ஜமாபந்தி துவக்கம்
தாராபுரம், ஜூன் 12 – தாராபுரத்தில் ஜமாபந்தி இன்று (வியாழனன்று) துவங்குகிறது. தாராபுரம் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான 1428  ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழனன்று தொடங்கி (ஜூன் 13 )உள்வட்டம், 14  ஆம் தேதி அலங்கியம் உள்வட்டம், 18 ஆம் தேதி மூல னூர் உள்வட்டம், 19 ஆம் தேதி கன்னிவாடி உள்வட்டம்,  20 ஆம் தேதி குண்டடம் உள்வட்டம், 21 ஆம் தேதி  குண்டடம் உள்வட்ட தொடர்ச்சி, 25 ஆம் தேதி பொன்னா புரம் உள்வட்டம், 26 ஆம் தேதி சங்கரண்டாம்பாளையம் உள்வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜமாபந்தி நடை பெறுகிறது.  இந்த வருவாய் தீர்வாயத்திற்கு துணை ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்து நிவாரணம் பெறலாம் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டாஸ்மாக் ஊழியர் கையை வெட்டி ரூ.2.57 லட்சம் கொள்ளை

திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை மேற்பார்வை யாளரின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.2.57 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச்  சென்றனர்.  திருப்பூர் காளிபாளையம் 1991 எண் கொண்ட டாஸ் மாக் கடையில் பணி புரியும் மேற்பார்வையாளர் யுவராஜா என்பவர் மதுபானம் விற்பனை தொகையை வங்கியில் செலுத்துவதற்கு செவ்வாயன்று வாகனத்தில் சென்றார். பூலுபட்டி பகுதியில் காரை நிறுத்திவிட்டு வங்கிக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அவரது கையில் வெட்டி விட்டு அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தார் யுவராஜாவிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீ விபத்தில் குடிசை வீடு சேதம்

அவிநாசி, ஜூன் 12- அவிநாசி அருகே உள்ள குன்னத்தூரில் குடிசை வீடு தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது.  குன்னத்தூர் அருகே தொட்டவளவு, கருமஞ்சிறைப் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி மனைவி சாந்தி  (47). கூலித் தொழிலாளி. இந்நிலையில் இவர் செவ்வா யன்று காலையில் ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இவரது  குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்த குன்னத்தூர் காவல்துறையினர், பெருந்துறை தீய ணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.