tamilnadu

img

விவசாயத்தை பாதுகாக்க காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை செயல்படுத்திடுக

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

தருமபுரி, அக். 6- விவசாயத்தை பாதுகாக்க காவிரியின் உபரிநீரை தரும புரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில்  நிரப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வரு கிறது. ஆண்டுக்கு ஆண்டு மழை பொழிவின் அளவு  குறைந்து வரு கின்றன. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரு கிறது. இதேநிலை நீடித்தால் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழகத் தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறாகும். இந்த ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் தமிழகத்திற்குள் நுழைகிறது. ஆனால், தருமபுரி மாவட்டம் முழுவதும் வறட்சி  மாவட்டமாகவே நீடிக்கிறது.  இம் மாவட்டத்தின் முதன்மைத் தொழி லாக விவசாயம் உள்ளது.  இந்நிலையில் மாவட்டத்தில் 4 லட்சத்து 49,777 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடை பெறுகிறது. ஆனாலும், அதில் ஒரு லட்சத்து 95,740 ஹெக்டேர் நிலங்கள் மட்டும் தான் பாசன வசதி பெற்றவை ஆகும். அதாவது  தருமபுரி மாவட்டத்தில் உள்ள  மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 சதவிகித நிலங்கள் மட்டுமே  பாசன வசதி பெற்றவை, மீத முள்ள 56.48 சதவிகித நிலங்கள்  மழையை நம்பியே உள்ளது.  ஆனால், தருமபுரி மாவட்டத் தில் மழை அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. தரு மபுரி மாவட்டத்தில் இயல்பான மழை அளவு ஆண்டுக்கு 853.10 மிமீ ஆகும். ஆனால், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை 53 சத விகிதம் குறைவாகவே பெய்தி ருக்கிறது. வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், நடப்பாண்டிலும் வறட்சி நீடிக்கிறது. தருமபுரி மாவட்ட மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள்  விவசாயத்தையே நம்பியுள்ளனர்.   மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று  விட்டது.  மாவட்டத்தில் உள்ள  ஈச்சம்பாடி அணை, கேசரகுழி பள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகா வதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10  அணைகளும் வறண்டு காணப்படு கிறது.

இதே நிலை நீடித்தால் மாவட் டத்தில் வேளாண்மை நிரந்தர மாக அழிந்து விடும் ஆபத்து உள்ளது. இந்நிலையில் மழைக் காலங்களில் காவிரி ஆற்றில் ஏற் படும் வெள்ள பெருக்கால்  ஓனேக்கல் பகுதியில் காவிரி  உபரி  நீர் 3 டிஎம்சி தண்ணீரை சேமிக்க  வேண்டும். இதனை நீரேற்றும்  மின் மோட்டார்கள் மூலம்  மாவட் டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10 அணைகள், 83  ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர் நிலைகளில் நிரப்ப முடியும். எனவே தருமபுரி மாவட்ட விவசாயிகளை பாது காக்க, காவிரி உபரிநீர் பாசனத்  திட்டத்தை செயல்படுத்து வதற்கும், அதற்காக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச்செயலாளர் ஏ.குமார் கூறுகையில், தருமபுரி மாவட்டம் உதயமாகி அரை நூற்றாண்டு காலமாகியும் பொருளாதாரம் மற்றும் மனிதவளத்திலும் தொடர்ந்து பின் தங்கி உள்ளது. விவசாயத்தை முதன்மையாக கொண்ட இம்மாவட்டத்தில் மழை பொழிவின் அளவு குறைந்து வருவதால்   நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இத னால் வேலையின்மை அதிகரித் துள்ளது. மேலும் வேலையின்மை யால் அருகாமை மாநிலம், மாவட் டங்களுக்கு வேலை தேடி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.   எனவே, தமிழக அரசு காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும்  திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல் படுத்தவேண்டும். ராசிமணலில் அணை கட்ட வேண்டும். ஒகே னக்கல் நீர்மின் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும். வட்டந்தோறும் வேளாண் சார்ந்த தொழிற்சாலை மற்றும் தருமபுரியில் சிப்காட் ஆகியவற்றை அமைக்க வேண்டும். நூறுநாள் வேலையை 250 நாட்களாக அதிகரித்து, ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 வழங்கவேண்டும். இலவச மனைப்பட்டா, அனுபவ நிலங் களுக்கு பட்டா ஆகியவை வழங்க வேண்டும். மேலும் எட்டு வழிச்சாலை, உயர்அழுத்த மின் கோபுரம், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், எண்ணெய் கிடங்கு அமைப்பது போன்ற திட்டங்கள் விவசாய நிலங் களை பாழ்படுத்தும் திட்ட மாகும். எனவே இத்திட்டம் செயல் படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அக் டோபர் 10ஆம் தேதியன்று தரும புரியில் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாடு வெற்றிபெற மக்கள் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.