tamilnadu

img

ஊரடங்கால் மாம்பழம் ஏற்றுமதி பாதிப்பு - விவசாயிகள் வேதனை

தருமபுரி, மே15- கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக மாம்ப ழம் ஏற்றுமதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி யில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. பாலக்கோடு, காரிமங்கலம் வட்டங்களில்  மாரண்டஅள்ளி, காரிமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, குண்டாங்காடு  போன்ற பகுதியில் செந்துரா, பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவ, நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு  விளையும் மாம்பழங்கள் உள்ளநாடு மற்றும் வெளிநா டுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது ஏப்ரல், மே மாதங்களில் மாம்பழங்களை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வியபாரிகள் மூலம் ஏற்றுமதி செய்வது வழக்கம், ஆனால், இந்த ஆண்டு கடந்த மார்ச்  மாதம் முதல் கொரோனா தடுப்பின் காரணமாக போக்கு வரத்து முடக்கப்பட்டது. இதனால் இங்கு விளைவிக் கப்படும் மாம்பழங்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநா டுகளுக்கும் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் முன்வர வில்லை. உள்ளூரில் உள்ள விளைவிக்கப்பட்ட மாம்ப ழங்கள் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வியபாரிகள் மிகக்குறைந்த விலைக்கே விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கர் மா சாகுபடிக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்யும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பெரும் நஷ் டத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே தமிழக அரசும், வேளாண்மை துறையும் கிராம நிர்வாக அலுலர் மூலம் கண்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என  மா விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசை யும் வலியுறுத்தியுள்ளனர்.