tamilnadu

img

என் அம்மா வருகைக்காக காத்திருக்கிறேன்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளி லேயே இருக்க வேண்டும் என அறி வுறுத்தினாலும், பலர் பொறுப்பற்ற முறையில் சாலைகளில் சுற்றி வருகின் றனர். அப்படி உள்ளவர்களுக்கு பல வகைகளில் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலை யில் ஒரு மருத்துவரின் மகளின் உருக் கமான வேண்டுகோள் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த அம்ருதா. 9 வய தான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகி றார். இவரது தந்தை நல்லதம்பி வேட் டைக்காரன்புதூர் மருத்துவமனை யிலும், தாய்  பூரணி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மருத்து வராக பணியாற்றி வருகின்றனர். இந்நி லையில் அம்ருதா ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அம்ருதா கையில் வைத்திருக்கும் பதாகையில், ‘என் அம்மா ஒரு மருத்துவர். உங்களுக்கு உதவுவதற்காக என்னை விட்டு பிரிந்து உள்ளார். நீங்கள் தயவு செய்து வீடுகளிலேயே இருந்து உதவ முடியுமா?, நான் என் அம்மாவின் வரு கைக்காக காத்திருக்கிறேன். வீடுகளில் இருங்கள், நாட்டை காப்போம்’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.  மருத்துவரின் சேவைகளையும், மகளின் பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.