ஈரோடு,டிச 13- பவானிசாகர் ஒன்றியத்தில் வீட்டு மனை கேட்டு வீடுகளில் கருப்புகொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். பவானிசாகர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. இங்கு 70 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இவர்களுக்குவீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை தொகுப்பு வீடு, பசுமை வீடு உள்ளிட்ட அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் இவர்களுக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தா லும், இதுவரையிலும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால், ஆவேசமடைந்த அக்கிராம மக்கள் வெள்ளியன்று கிராமத்தினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சனை தேர்தலில் எதிர் ஒலிக்கும் என கருதப்படுகிறது.