கோவையில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு கிடங்கில் மட்டுமே அம்பேத்கர் சிலை வைத்திருப்பதால் அவரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று அரசியல் இயக்கங்கள் மற்றும் தலித் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மற்ற நாட்களில் யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை. இந்நிலையில் இருக்கும் ஒரே அம்பேத்கர் சிலையின் பீடங்கள் உடைந்தும், படிக்கட்டுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனை உடனடியாக உணவு கிடங்கு நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.