கோவை, நவ. 18- விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து ஆவேசமிகு மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் பவர்கிரிட் நிறு வனமும், தமிழக அரசின் மின் தொடர மைப்புக் கழகமும் இணைந்து விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபு ரங்கள் அமைக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கைவிட்டு நெடுஞ்சாலையோரம், புதைவடமாக செயல்படுத்த வேண் டும். ஏற்கனவே விளை நிலங்களில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங் களுக்கு இழப்பீடு தொகை தர வேண் டும் என வலியுறுத்தி திங்களன்று தமிழ கம் முழுவதும் 50 இடங்களில் விவ சாயிகள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவையில் சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயி கள் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் திமுக முன் னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி. ஆர்.பழனிசாமி உள்ளிட்ட நூற்றுக் கணக்கான விவசாயிகள் பங்கேற்று கைதாகினர். இதேபோல், கோவை கருமத்தம் பட்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கி னார். இதில் காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி. எம்.சி.மனோகரன் உள்ளிட்ட விவ சாயிகள் கலந்து கொண்டு கைதா கினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், பவானியில் நடைபெற்ற மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் வி.பி.குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.எம்.முனுசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மதிமுக நிர்வாகி வீரகுமாரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். சென்னிமலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், ஏஐடியுசியின் பொது செயலாளர் எஸ்.சின்னுசாமி, சா.செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, சிவகுமார் மற்றும் செல்வராசு உள்ளிட்ட 100க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு கைதா கினர். மொடக்குறிச்சி பகுதியில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு குமாரசாமி தலைமை வகித்தார். கீழ்பவானி பசான சங்க செயலாளர் வடிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந.பெரியசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.