tamilnadu

img

திருப்பூரில் தொடரும் டெங்கு பாதிப்பு காய்ச்சல் தடுப்பு பணிகளை உயரதிகாரி ஆய்வு

திருப்பூர், டிச. 13 - திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புத் தொடரும் நிலையில், காய்ச்சல் தடுப்புப் பணிகளை பொது சுகாதாரத் துறை உயரதி காரி நேரில் ஆய்வு மேற்கொண் டார்.  திருப்பூர் மற்றும் சுற்று வட்டா ாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் மட்டுமின்றி அவிநாசி, பொங்கலூர், பெருமா நல்லூர், பல்லடம் என சுற்று வட் டார ஒன்றியப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தாக்குதல் அதிகளவில் உள்ளது.  தற்போதைய நிலவரப்படி திருப்பூரில் சுமார் 15 பேர் டெங்கு காய்ச்சல் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை வட்டாரத்தினர் தெரிவித் தனர். எனினும் அதிகாரப்பூர்வ மான புள்ளி விபரங்களைத் தரா மல் இத்துறையின் உயரதிகாரிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுப் பாட்டில் இருப்பதாகவும், தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதா கவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை கூடுதல் இணை இயக்குநர் டாக்டர் வடி வேலன் புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் திருப்பூர் மாவட் டத்தில் நேரடி கள ஆய்வு மேற் கொண்டார். புதன்கிழமை அன்று அவிநாசி, பொங்கலூர், பெருமா நல்லூர், பல்லடம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித் தனர்.

அதேபோல் வியாழக்கிழமை அன்று காலை திருப்பூர் மாநக ராட்சிப் பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். 41ஆவது வார்டு சந்திரா புரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டு, மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை ஆய்வு செய்தார். அத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக் குநர் டாக்டர் ஜெகதீஸ்குமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் பூபதி உள்ளிட்ட உயர் அதிகாரி கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிகாரிகள் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் டெங்கு கட்டுப்பாட்டு பணிகள் பற்றி கூடு தல் இணை இயக்குநர் டாக்டர் வடிவேலன் திருப்தி தெரிவித்த தாகக் கூறினர். அதே சமயம் தற் போது மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர், டெங்கு காய்ச்சல் தாக் குதலுக்கு உள்ளானவர்கள் பற்றிய விபரத்தைக் கேட்டபோது அதைத் தெரிவிப்பதற்கு மறுத்து விட்டனர்.  அதேசமயம் மாநில அரசின் பொது சுகாதாரத் துறை உயர் அதிகாரி பாதிப்பு இல்லாதபோது நேரில் கள ஆய்வு செய்ய வேண் டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. எனவே டெங்கு காய்ச் சல் உள்பட நோய்த் தாக்குதலின் தீவிரம் அதிகளவில் இருக்கும் நிலையில்தான் உயர் அதிகாரிகள் கண்காணிப்பு நடைபெறுகிறது என்பதை அறிய முடிகிறது. அதே சமயம் இப்பிரச்சனையில் அர சுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக் காமல் இருட்டடிப்புச் செய்கின்ற னர். இது ஒருபுறம் இருக்க, மாநக ரிலும், சுற்று வட்டாரப் பகுதிக ளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர் நடவடிக்கை மேற் கொண்டு வருவதாக மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை அலுவ லர்கள் தெரிவித்தாலும், பல பகுதிகளிலும் குப்பை, கழிவுநீர் தேக்கம், சுகாதார சீர்கேடு பரவ லாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க விரி வான முறையில் மக்கள் பங்கேற்பு டன் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் எதிர்பார்க் கின்றனர்.