tamilnadu

img

குப்பைகளை அகற்றாத மாநகராட்சியால் சுகாதார சீர்கேடு

திருப்பூர், அக்.23- திருப்பூர் மாநகராட்சியின் அலட் சியத்தால் 56 ஆவது வார்டு பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.  திருப்பூர் மாநகராட்சி 56 ஆவது வார்டு பாரப்பாளையம் பகுதியில் மாந கராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பின்புறம் கடந்த ஒரு மாதமாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதன் அருகி லேயே அங்கன்வாடி மையமும் அமைந் துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவு வதை தடுக்க ஊரெல்லாம் சோதனை செய்து அபராதம் விதித்து வரும் மாந கராட்சி நிர்வாகம், குழந்தைகள் இருக் கும் பகுதியில் இதுபோல் குப்பை அள் ளப்படாமல் மெத்தனம் காட்டுவதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இங்கு வைத்திருந்த குப்பைத் தொட்டி களையும் எடுத்துக் கொண்டு போய் விட்டதால் மக்கள் குப்பைகளை வெட்ட வெளியில் கொட்டி வருகின்ற னர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?