கோவை, அக்.12- சிறுமி காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் கிராம வாசிகளை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள குமார பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு வெற்றி வேல் (7) என்ற மகனும், சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ம் தேதி வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளை யாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.ஆனால், குழந்தை காணாமல் போய் ஏழு நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் குழந்தையை விரைந்து கண்டு பிடித்து தரக்கோரியும், விசாரணை என்ற பெயரில் கிராம வாசிகளை காவல் துறையினர் அடித்து துன்பு றுத்துவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அக்கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.