tamilnadu

img

அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை, மே 20-கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே மீட்கப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கடந்த வியாழக்கிழமையன்று பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு கல்லூரி மாணவர்கள் குழந்தையைப் பற்றி அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கல்லூரி மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில் அந்த குழந்தைக்கு அர்ஜூன் என பெயர் சூட்டி காப்பகத்திற்கு (லைப் லைன்) ஒப்படைத்தனர்.

;