tamilnadu

img

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- வைரமுத்து

நாமக்கல், செப்.17- இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப் பார்கள். அரசும் உறுதியாக இருக்க வேண்டும் என பாடலாசி ரியர் வைரமுத்து திங்களன்று கூறியுள்ளார். கவிஞரும், திரைப்பட பாடலா சிரியருமான வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தக அறிமுக  விழா நாமக்கல்லில் நடை பெற்றது. இவ்விழாவில் பாடலா சிரியர் வைரமுத்து பங்கேற்றுப் பேசியதாவது: வடக்கில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தி  தான் இந்தியாவை கட்டுவிக்கும்  மொழி. இந்தி தான் ஒற்றுமைப் படுத்தும் மொழி. ஏனென்றால் அதிகமாக பேசப்படும் மொழி அது  என கேள்வி கேட்டது. அந்தக்  கேள்விக்கு அண்ணா தொடர் பான கட்டுரையில் பதில்உள்ளது. உலகத்தின் மிகச் சிறந்த மொழி களின் பட்டியலில் தமிழ் வரு கிறது என இங்கு கல்லூரி தாளாளர்  பேசினார். சமஸ்கிருதம் மொழி  இன்று பேச்சு வழக்கில் இல்லை.  ஹீப்ரு மொழி இன்று தொலைந்து விட்டது. கிரேக்க மொழி அழிந்து விட்டது. பழைய செம்மொழி களின் பட்டியலில் தமிழ், சீனம் மட்டும் தான் உள்ளது. தமிழ் மக்கள் 5 ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சி. அதன் பிம்பங்களாக தமிழர்கள் உள்ளனர்.  திருக்குறள் ஒட்டு மொத்த  தமிழினத்தின் அறிவு உயில் என  பார்க்க வேண்டும். படைப்பா ளிக்கு தன் படைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு எந்த பரிசும் தேவை யில்லை. வட சொல்லை தவிர்க்க இயலாது. வணிகம் உள்ளிட்டவற் றின் மூலம் வடசொல் வந்தே தீரும். அப்படி வந்தால் அந்தச் சொல்லை  தமிழ் படுத்தி உள்ளே ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 69 ஆண்டு களாகிவிட்டது. இந்த 69 ஆண்டு களில் 101 முறை அரசியல மைப்புச் சட்டம் திருத்தப்பட் டுள்ளது. ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் ஒரு வரி கூட  திருத்தப்படவில்லை. தமிழ்  சொல்லை பாதுகாக்க வேண்டும். அதனுடன் உறவாட வேண்டும். உலகத்தில் வேகமாக செல்வது ஒளிதான். ஒளியை விட வேக மாக செல்வது சொல் தான். உங்கள்  பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்  சூட்டுங்கள். ஒவ்வொரு பெய ரிலும் ஒரு வாழ்வு இருக்கிறது. ஒவ்வொரு பெயரிலும் ஒரு நாகரீகம் இருக்கிறது. ஒரு பெயர் சொல்லும்போது ஈராயிரம் ஆண்டு கலாச்சார வாசனையை எது நாசிக்கு கொண்டு வருகிறதோ அதுதான் நல்ல தமிழ் பெயர். அதுதான் நல்ல சொல். இவ்வாறு வைரமுத்து பேசினார்.  இதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதா வது, இந்தி மொழி தான் இந்தி யாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து ஒலிக்கப்பட்டது. அதில் தமிழர்களுக்கு மட்டுமின்றி  இந்தி மொழி பேசாத பிற மாநிலத்து மக்களுக்கும் உடன் பாடு இருக்காது. சூரியன் கூட  ஒட்டுமொத்த பூமிக்கு ஒரே பகலை  கொண்டு வந்து இணைக்க முடிய வில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும். இரு மொழிக் கொள்கை என்பது தான் அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்து கொடுத்த ஜீவ  கொள்கை. இரு மொழிக் கொள் கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள். அரசும் உறுதி யாக இருக்க வேண்டும் என  விரும்புகிறோம் என தெரிவித் தார்.